உங்களிடமுள்ள படங்கள் மற்றும் வீடியோக்களை thamilpengal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்...

இரண்டு பங்கு

ஒரு பெண்ணுக்கு அப்போது தான் விவாகரத்து ஆனது. புருஷன் ரொம்ப கொடுமைக்காரன். தவிர அவளுக்கு ஜீவனாம்சம் பணமும் கொடுக்கவில்லை. இதனால் கவலையுடன் கடலை நோக்கி தற்கொலை செய்துகொள்ள நடந்து கொடிருந்தாள். அப்போது அங்கே ஒரு விளக்கு கடல் அலையினால் கரை ஒதுங்கி இருப்பதைக் கண்டாள். அதைத் தேய்த்ததும் ஒரு பூதம் தோன்றியது.

பூதம் சொன்னது: “பெண்ணே, நீ எனக்கு விடுதலை கொடுத்ததால், நீ என்ன கேட்கிறாயோ, உனக்கு அது நடக்கும்படி செய்வேன்”

பெண்: “அப்படியா, ரொம்ப சந்தோஷம்”

பூதம்: “ஆனால் நீ யாரை ரொம்பவும் வெறுக்கிறாயோ, உனக்கு நடப்பது, அவர்களுக்கு இரண்டு பங்கு நடக்கும். அதாவது, உனக்கு ஒரு கோடி ரூபாய் கிடைக்குமென்று நீ விரும்பினால், உனக்கு ஒரு கோடி ரூபாய் கிடைக்கும், ஆனால் உன் முன்னாள் புருஷனுக்கு இரண்டு கோடி கிடைக்கும்”

பெண் அமைதியாக சொன்னாள் : “நான் ரெட்டைப் பிள்ளை பிரசவிக்க ஆசைப்படுகிறேன்

No comments:

Post a Comment